search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி சீரமைப்பு"

    • நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
    • இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து.

    இதற்காக இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து வண்ண மயமாக மாற்றி உள்ளனர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளாக வே நிதியைத் திரட்டி ரூ. 50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து உள்ளனர்.

    அதேபோன்று வருகிற அக்டோபர் 15-ந்தேதி நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • வகுப்பறைக் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்தது.
    • ரூ.3,54,000 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வகுப்பு கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையத்தானூர் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இப்பள்ளிக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன.

    அப்பொழுது வகுப்பறைக் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்தது. அதனை அடுத்து 2009-ம் ஆண்டு சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சீரமை க்கப்பட்டன.

    இருப்பினும் சீரமைப்பு பணிகளும் சரிவர மேற்கொள்ள படாததால் பள்ளி மேற்கூரைகள் அவ்வப்போது போது உடைந்து விழுந்து வந்தன. மேலும் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே மழைநீர் ஒழுகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை கவனித்த உடையவர் திருவடி அறக்கட்டளையினர் பள்ளியை சீரமைக்க முன்வந்து ரூ.3,54,000 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வகுப்பு கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாண வர்கள் சார்பில் பள்ளியை சீரமைத்து கொடுத்த உடையவர் திருவடி அறக்க ட்டளைக்கும், செய்தியின் மூலம் பள்ளியின் நிலையை வெளிக்கொண்டு வந்த மாலை மலர் நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    ×