search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பளுதூக்கும் போட்டி"

    • 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா
    • போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி கடந்த 4 மற்றும் 5-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

    இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் துணை தலைவரும், தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவருமாகிய பொன் ராபர்ட்சிங் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில பளுதூக்கும் சங்க பொதுசெயலாளர் சண்முகவேல், பொருளாளர் சிதம்பரராஜன், குமரி மாவட்ட பளுதூக்கும் சங்க தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • நாகர்கோவிலில் 2 நாட்கள் நடக்கிறது
    • 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வருகை தருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை சிறப்பாக நடத்த 15-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர். போட்டியின் 2-ம் நாள் மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவர் பொன் ராபர்ட்சிங், பொதுச்செயலாளர் சண்முகவேல், குமரி மாவட்ட பளுதூக் கும் சங்கதலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன் சுந்தர்நாத் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×