search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி
    X

    மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

    • நாகர்கோவிலில் 2 நாட்கள் நடக்கிறது
    • 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வருகை தருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை சிறப்பாக நடத்த 15-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர். போட்டியின் 2-ம் நாள் மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவர் பொன் ராபர்ட்சிங், பொதுச்செயலாளர் சண்முகவேல், குமரி மாவட்ட பளுதூக் கும் சங்கதலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன் சுந்தர்நாத் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×