search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மாநில பளுதூக்கும் போட்டி
    X

    நாகர்கோவிலில் மாநில பளுதூக்கும் போட்டி

    • 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா
    • போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி கடந்த 4 மற்றும் 5-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

    இந்த போட்டியில் 160-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 5-ந்தேதி மாலையில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் துணை தலைவரும், தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவருமாகிய பொன் ராபர்ட்சிங் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில பளுதூக்கும் சங்க பொதுசெயலாளர் சண்முகவேல், பொருளாளர் சிதம்பரராஜன், குமரி மாவட்ட பளுதூக்கும் சங்க தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பளுதூக்கும் சங்கத்தினர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×