search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்கூர்மலை பகுதிகளில் கடுங்குளிர்"

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது.
    • குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ள ம்அணை, பெரும்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம் அணை, மற்றும் பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதன் காரணமாக திம்பம், தாளவாடி, பர்கூர் மலை பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. பச்சை போர்வை விரித்தாற் போல் மலை பகுதிகள் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றுமழை நின்றுவிட்டதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடுங் குளிர் நிலவியது. குறிப்பாக தாளவாடி, திம்பம், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் கடுங்குளிரும், கடுமையான பனியும் நிலவியது.

    இதனால் காலை நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மலை கிராமங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர். குளிரின் பிடியில் இருந்து தப்பிக்க உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா, ஸ்கார்ப் அணிந்து இருந்தனர்.

    மலை பகுதிகளில் இருந்து சமவெளி பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ×