search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைமர விதை"

    • ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
    • 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.

    பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.

    தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.

    மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.

    ×