search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை பொருட்கள்"

    • கொறுக்கை ஊராட்சியில் அதிகமான பனை மரங்கள் உள்ளது.
    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி 20 பெண்களுக்கு நடத்த ப்பட்டது.

    பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி ராமன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    கொறுக்கை ஊராட்சி யில் அதிகமான பனை மரங்கள் உள்ளது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் பயன்களை யாரும் அறியவில்லை.

    இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உள்ளது.

    மேலும், இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்ய ப்படும் என்றார்.

    நிகழ்ச்சி யில் பயிற்சி யாளர் ஜான்சி ராணி பயிற்சி விபரங்களை குறித்து எடுத்துரைத்தார்.

    ஊரக வாழ்வா தார இயக்க வட்டார மேலாளர் புரு ஷோ த்தமன், மகளிர் கூட்ட மைப்பு தலைவி சுமதி, பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 55 வருடங்களாக இந்த பனை ஓலை பெட்டிகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன் என்று மூதாட்டி ராமு கூறினார்.
    • பிளாஸ்டிக் பொருட்களில் உணவை வைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுதான் என்று மூதாட்டி தெரிவித்தார்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து செட்டியாபத்து வழியாக மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின் ரோட்டின் கரையில் பெட்டிக்கடை வைத்து கண்காணித்துக் கொண்டிருக்கும் 75 வயது மூதாட்டி ராமு. பனைமரத்து இளம் குருத்து ஓலைகளை பக்குவப்படுத்தி, அதற்கு வண்ணம் தீட்டிபனை ஓலை பெட்டிகளை தயார்செய்து கொண்டிருந்தார். அவர் கூறியதாவது:-

    சுமார் 55ஆண்டுகளுக்கு முன்பு எனது 20 வயதில் பனைஓலைக்கு எப்படி வர்ணம் தீட்டி, அதை எப்படி உருவாக்க வேண்டும்என்றுஎனது தாயார் எனக்கு விளக்கம் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை சுமார் 55 வருடங்களாக இந்த பனை ஓலை பெட்டிகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.

    ஒரு பெட்டியை 10 பைசாவுக்கு என்னிடம் கொள்முதல் செய்த வியாபாரி பனை ஓலை பெட்டியை இன்று ரூ.30 -க்கு வாங்குகிறார்கள். இடையில் திருமணம், வெளியூர் பயணம் என சுற்றி விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி வந்து பனை ஓலைப் பெட்டியை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமானவர்கள் என்னிடம் பனை ஓலை பெட்டி மொத்தமாக கேட்கிறார்கள்.

    பனை ஓலை பெட்டியை பொறுமையாக இருந்து செய்வதற்கு இப்போது ஆள் இல்லை, நான் ஒரு நாளைக்கு 10 பெட்டிகளை உருவாக்குவேன் 300 ரூபாய்க்கு என்னிடம் வாங்குகிறார்கள், பனை ஓலைக்கு வண்ணம் தீட்டுதல், பனை ஓலை கழிவு என போய் விட்டால் 10 பெட்டிக்கு ரூ.200 கிடைக்கும். சுற்று எந்த சூழ்நிலையிலும் தடையில்லாத பனை ஓலை பெட்டிக்கு எப்போதும் மவுசு அதிகம்தான். உணவு பொருளை இந்த பெட்டியில் வைத்து ஒரு நாள் இரு நாள் என பாதுகாத்து சாப்பிடலாம்.

    உடம்புக்கு கெடுதல் இல்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வண்ண வண்ண மாடலில் எத்தனை பொருட்கள் வந்தாலும் அதில் உணவை வைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு, எப்போதும் மக்களுக்கு பயன் தரக்கூடியது பனை ஓலை பெட்டி தான் என்று மூதாட்டி கூறினார்.

    ×