search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palm products"

    • கொறுக்கை ஊராட்சியில் அதிகமான பனை மரங்கள் உள்ளது.
    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பனை ஓலை தொழில்நுட்ப பயிற்சி 20 பெண்களுக்கு நடத்த ப்பட்டது.

    பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜானகி ராமன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    கொறுக்கை ஊராட்சி யில் அதிகமான பனை மரங்கள் உள்ளது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் பயன்களை யாரும் அறியவில்லை.

    இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும். எதிர்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உள்ளது.

    மேலும், இது போன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்ய ப்படும் என்றார்.

    நிகழ்ச்சி யில் பயிற்சி யாளர் ஜான்சி ராணி பயிற்சி விபரங்களை குறித்து எடுத்துரைத்தார்.

    ஊரக வாழ்வா தார இயக்க வட்டார மேலாளர் புரு ஷோ த்தமன், மகளிர் கூட்ட மைப்பு தலைவி சுமதி, பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தற்போது இரண்டாம் கட்டமாக இன்று விற்பனை தொடங்கியது.

     நெல்லை:

    ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ெரயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 8-ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக இன்று விற்பனை தொடங்கியது.கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, பனம் பழ ஜூஸ், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தற்போது இன்று முதல் மீண்டும் 2-வது முறையாக 15 நாட்களுக்கு பனை பொருட்கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் பொருட்க ளிலிருந்து தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் இருந்து 10 சதவீதம் அளவுக்கு விலை குறைவாக இருப்பதால் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இங்கு வெற்றிலைப் பெட்டி, குழந்தைகள் விளையாடும் கிலுக்கு, காய்கறிக் கூடை, விசிறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பனை ஓலையால் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    ×