search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் உற்பத்தியாளர்கள்"

    திடீரென நூல் விலை உயர்ந்துள்ளதால் தற்போதைய ஆர்டரை பூர்த்தி செய்வதிலும் புதிய ஆர்டர்களை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட உதவியாக அக்டோபர் மாத நூல் விலையை தொடர வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இதுதொடர்பாக அனைத்து நூற்பாலை சங்கங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திடீரென நூல் விலை உயர்ந்துள்ளதால் தற்போதைய ஆர்டரை பூர்த்தி செய்வதிலும் புதிய ஆர்டர்களை ஏற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    இதேநிலை நீடித்தால்  ஆயத்த ஆடை துறையினர் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய முடியாது. ஏற்றுமதி வர்த்தகர்களிடம் மற்ற விலை உயர்வை காரணம் காட்டி  கூடுதல் விலைபெற முடியாது.

    போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆயத்த ஆடைகளுக்கான சர்வதேச விலை குறைவாக உள்ளது. விலை உயர்ந்தால் ஆர்டர் வேறு நாடுகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதனால்  ஜவுளி மதிப்பு சங்கிலி பாதிக்கப்படுவதுடன் வேலையிழப்பும் ஏற்படும்.

    ஆயத்த ஆடை துறையின் நீண்டகால உறவை பேணி பாதுகாக்கும் வகையில் அக்டோபர் மாத நூல் விலையையே இம்மாதமும் தொடர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்து இருப்பு வைக்கும் இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) சீசன் இல்லாத நேரத்தில் அதிக விலைக்கு பஞ்சு விற்கிறது. குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரியை போல்  அதிக விலைக்கு விற்கிறது.

    பஞ்சு விற்பனையில்  சிறு, குறு நிறுவனங்களை கணக்கில் எடுப்பதில்லை. இதனால்  அதிக விலைக்கு பஞ்சு வாங்கி ஆடையை அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சிறு, குறு தொழில்கள், நூல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

    இந்தியாவில் உற்பத்தியாகும் 350 லட்சம் பொதி பருத்தி பஞ்சில்  உள்நாட்டு தேவைக்கே 300 லட்சம் பொதி தேவைப்படுகிறது. இருப்பினும்  உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    குறைந்த அளவு பஞ்சு மற்றும் நூலிழையை உற்பத்தியாளருக்கு கொடுப்பதால் விலை உயர்வும் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.சி.சி.ஐ., அமைப்பு, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்த பிறகே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

    பருத்தி பஞ்சை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும். நிதித்துறை, ஜவுளித்துறை அமைச்சர்கள் தலைமையில் கூடி செயற்கை தடைகளை நீக்க ஆலோசிக்க வேண்டும்.

    செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு மற்றும் நூல் விலையை உயர்த்தும் அமைப்புகளை தண்டிக்க கடுமையாக சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    அனைத்து வகை மூலப்பொருட்கள் விலை மற்றும் ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்கள் வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று ஆடைகள் தயாரிக்கின்றன. மேலும் நூல் விலை, ஜாப்ஒர்க் கட்டணம் என உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு ஆடை விலை நிர்ணயிக்கப் படுகிறது. 3 மாதம் முன்னரே ஆர்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஆடை விலை உறுதி செய்யப்படுகிறது.

    இதனால் மூலப்பொருட்கள் விலையில் ஏற்படும் திடீர் உயர்வு ஆடை உற்பத்தியாளர்களை பெரும் நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. இந்தாண்டு நிட்டிங் கட்டணம் 20 சதவீதம், சாயக்கட்டணம் 15 சதவீதம், ரோட்டரி பிரின்டிங் கட்டணம் 20 சதவீதம், எலாஸ்டிக் கட்டணம் 15 சதவீதம், அட்டைபெட்டி விலை  கடந்த மார்ச் மாதம் 15 சதவீதம், அக்டோபரில் 20 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி பாலிபேக், தையல் நூல், பவர்டேபிள் என அனைத்து ஜாப்ஒர்க் கட்டணங்கள், ஆடை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. பனியன் தொழிலாளர் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் சரக்கு கப்பல் கட்டணமும் அபரிமிதமாக உயர்ந்துள்ளன.

    இந்நிலையில் தமிழக நூற்பாலைகள் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நூல் விலையை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தியுள்ளன. ஏற்கனவே தவித்துவரும் ஆடை உற்பத்தி துறையினர் தற்போது நூல் விலை உயர்வால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், வங்கதேசம், சீனா போன்ற போட்டிநாடுகளைவிட நமது ஆடை விலை 30 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. இதனால் ஆர்டர்கள் கைநழுவிப்போகின்றன. நூல் விலை ரூ.50 உயர்வு என்பது ஜீரணிக்கமுடியாததாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக உலக ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 3.8 சதவீதமாக வளர்ச்சியின்றி உள்ளது. பிரதான மூலப்பொருளான நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து ள்ளதால் ஆடை ஏற்றுமதி துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

    உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவு ஆடை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். ஜவுளி அமைப்புகள் ஒருங்கிணைந்து  பஞ்சு விலையை கட்டுப்படுத்த போராட வேண்டும் என்றார். திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க (டிக்மா) தலைவர் பாலசுப்பிரமணியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்து வகை மூலப்பொருட்கள் விலை மற்றும் ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு ஆயத்த ஆடை விலை 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 

    இந்த விலை உயர்வு வருகிற 5-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.அனைத்து நிறுவனங்களும் வர்த்தகர்களிடம் ஆடை விலை உயர்வு கேட்டு பெற வேண்டும். இக்கட்டான நிலைகளை உணர்ந்து வர்த்தகர்கள் ஆடை விலையை உயர்த்தி வழங்க முன்வரவேண்டும்.இவ்வாறு  அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    ×