search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதின் பருவத்தினர்"

    • `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.
    • வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. இளம் பருவத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நண்பர்களின் அழுத்தம், திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் காதல் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

    அந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு நம் சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

    இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப் படுவதால் தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

    பெற்றோர்களின் பங்கு

    பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    ×