search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதாகை"

    • போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
    • துண்டு பிரசுரங்களை வழங்கி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை மற்றும் எல். எம். சி.மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி எம்எம்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ரூபிசாந்தக்குமாரி தலைமை வகித்தார்.

    பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் கிருபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜய்அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதை பழக்கங்களுக்கு எதிராக மாணவ -மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.

    பின்னர் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் சீர்காழி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியில் தேசிய மாணவர் படை, சாரண-சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம், இளஞ்செஞ்சிலுவை அமைப்பு மற்றும் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளம்செஞ்சிலுவை அலுவலர் ஜோகன்னா நன்றிக கூறினார்.

    • பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், மழைநீரை சேமித்து வைக்கவும் வலியுறுத்தினர்.
    • மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பண்டாரவாடை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுல்தானாபர்வீன் தலைமை வகித்தார்.

    பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ஜபரூல்லா, செயலாளரும் தாளாளருமான முஹமதுபா ட்சா, பள்ளி முதல்வர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் தீபக் கலந்து கொண்டு தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தியும், மழைநீரை சேமித்து வைக்கவும், மரங்களை நடவு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணி பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது.

    இதில் பள்ளியின் நிர்வாக அலுவலர் கரிகாலன், நிர்வாககுழு உறுப்பினர் முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    ×