search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டம் விடும் திருவிழா"

    • மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
    • பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பட்டம் விடும் திருவிழா நேற்று நிறைவடைந்தது.

    நிறைவு நாளான நேற்று மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் தேவநேரி முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, சர்வதேச விழா, புராதன சின்னங்களை பார்க்க இலவசம் என்பதால் பஸ் பயணிகளும் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

    அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பட்டம் விடும் கலைஞர்கள் திருவள்ளுவர், சூப்பர்மேன், யானை, குதிரை, விநாயகர், ஆல்டோபஸ், கதகளி, விநாயகர், கார்ட்டூன் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பட்டம் விடும் விழாவின் மைதானம் அருகில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பட்டம் விட கலந்து கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு கலை ஞர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டம் விடும் திருவிழாவை கண்டு ரசித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுற்றுலாத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் கடலோர இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது.
    • கார்ட்டூன் வகை பட்டங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் கடலோர இடம் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    அமைச்சர்கள் மதி வேந்தன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ராட்சத பட்டம் செய்யும் கலைஞர்கள் 80-க்கும் மேற்பட்ட பட்டங்களை பறக்க விட்டனர்.

    குஜராத் கலைஞரின் வடிவமைப்பில் பறந்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பட்டம் விழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் ஏலியன், கார்ட்டூன் வகை பட்டங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

    இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பட்டம் விடும் திருவிழாவை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பைக் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்து குவிந்ததால் தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இரவில் கலை நிகழ்ச்சி, இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விடுமுறை நாளான இன்று பட்டம் விடும் திருவிழாவை காண அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ராஜேஸ் வைத்யாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பெயரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாய்லாந்தில் இருந்து வந்திருந்த சிறப்பு காற்றாடி கலைஞர் பெய்ரோ, பீட்டர் மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் பிரமாண்ட பட்டங்கள் விட நேற்று முயற்சி செய்தனர். ஆனால் பட்டத்தின் எடைக்கு ஏற்ப காற்று வீசுவது குறைவாக இருந்ததால் பறக்கவிடப்படவில்லை. இன்று அவர்களின் ராட்சத பட்டங்கள் பறக்கும் என எதிர்பார்கபடுகிறது.

    இந்த பட்டம் விடும் திருவிழா நாளை வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்கள் பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
    • பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் 10 குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 4 குழுக்களும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்களும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.


    இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

    பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேலும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6.00 மணி முதல் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று தாய் குடம் பிரிஜ்ட் பேண்ட் (Thaikkudam Bridge Band), 14.08.2022 மியூசிகல் பியூசன் (Musical Fusion) மற்றும் 15.08.2022 கிட்ஸ் டேலண்ட் ஷோ (Kids Talent Show) நடைபெறும்.

    பட்டம் விடும் திருவிழாவிற்கு கலந்துகொள்ள வரும் சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். மேலும் திருவிழா நடைபெறும் இத்திடலில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தர மோகன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாமல்லபுரம், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் வளர்மதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

    ×