search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சு ஆலை"

    • தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35).இவர் உடுமலை பகுதிக்கு உட்பட்ட சமத்துவபுரம் அருகே பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் இருந்து பரவிய தீ அங்கு கொட்டப்பட்டிருந்த பஞ்சுகளில் மீது விழுந்து தீ பற்றிக் கொண்டது. இதனை கண்ட தொழிலாளர்கள் அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ×