search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து செயலாளர்"

    • பணிகளை முடித்தபின்னர் ‘பில் பாஸ்’ செய்ய மறுத்ததாக புகார்
    • தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வேலை களை கோட்டயம் பகுதியை சார்ந்த பீட்டர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

    இவர் பணிகளை முடித்ததும் அதற்கான செலவின் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலவு பணத்தை பஞ்சாயத்து அலுவலக செயலாளர் சந்தோஷ்குமார் லஞ்சம் பெற்று விட்டு தான் பாஸ் பண்ணுவாராம். ஊழியர்கள் முதல் செக்கட்டறி வரை லஞ்சம் கொடுத்த பின்னர் ஒப்பந்த காரருக்கு ஒன்றுமே கிடைப்பதில்லையாம்.இந்த நிலையில் ஒப்பந்தகாரர் 2.5 லட்சம் ரூபாய்க்கு 3 வேலைகளை ஒப்பந்தம் எடுத்து பின்னர் அந்த வேலைகளை செய்து முடத்துள்ளார்.

    ஆனால் செக்கட்டறி சந்தோஷ்குமார் பில்களை தர மறுத்துள்ளார். தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தனக்கு நஷ்டம் தான் வரும் என்று ஒப்பந்தகாரர் புலம்பியுள்ளார். மன வேதனை அடைந்த ஒப்பந்தகாரர் செக்கட்டறி சந்தோஷ்குமாரின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து லஞ்ச ஒழிப்பு துறையை நாடியுள்ளார். அவர்களின் அறிவுரை படி செக்கட்டறி சந்தோஷ் குமாருக்கு ஒப்பந்தகாரர் பீட்டர் தொலை பேசியில் அழைத்து லஞ்சம் பணம் 75000 ரூபாய் பீல் வந்த உடன் தரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு செக்கட்டறி சந்தோஷ்குமார் முன் பணமாக 5000 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த பவுடர் தடவிய 5000 ரூபாய் பணத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து செக்கட்டறி சந்தோஷ்குமாரிடம் ஒப்பந்த காரர் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக செக்கட்டறி சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து ஊழியர்களிம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.சோதனையில் செக்கட்டறி மட்டுமில்லாமல் பல ஊழியர்கள் சிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து செக்கட்டறி யை கைது செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

    ×