search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை வீடு"

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான 12 பசுமை வீடுகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அத்திக்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 பசுமை வீடுகள் (பசுமை வீடு திட்டத்தின் நிதி தலா ரூ.3 லட்சம், ராம்கோ நிறுவன நிதி தலா ரூ.1 லட்சம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்று பசுைம வீடுகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் தான். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். அவர்களை நன்றாக கல்வி பயில செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    பெற்றோர்களாகிய நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே செல்வமாகும். கல்வியின் மூலம் அனைத்தும் பெறலாம். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து இந்த பகுதியில் இருந்து எதிர்காலத்தில் கலெக்டராகவோ, காவல் துறையில் சிறந்த அதிகாரியா கவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்க வேண்டும்.

    தங்கள் வாழ்வா தாரத்திற்கு பசு மாடுகள் வழங்கவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, வட்டாட்சியர் உமாமகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×