search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குதி உத்திர விழா"

    • நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று திருகல்யாணம் நடந்து வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலைவளம் காட்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×