search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதி சபா கூட்டம்"

    • கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    கரூர்,

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வெங்கமேடு பகுதியில், பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கலந்து கொண்டார். கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், தங்கள் வார்டில் ரோடு அமைத்தல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்களை கொடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு கொடுக்கப்பட்ட மனுக்கள் கோரிக்கையாக மாநகராட்சியில் கொடுத்து நிறைவேற்றித் தரப்படும் என உறுதி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், சபா உறுப்பினர்கள் அருள்முருகன், சுப்பிரமணி, அண்ணாதுரை மற்றும் சேகர், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வினோத், கவுன்சிலர் முனிராஜ். முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, பச்சையப்பன், சதீஷ்குமார் உள்ளிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வார்டு பகுதியில் போதிய குடி தண்ணீர், சாக்கடை கால்வாய்கள், தெருவிளக்கு கூடுதலாக அமைத்த தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×