search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் பரவும்"

    • டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
    • கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சாலைத் தெரு ஸ்டேட் பாங்க் எதிரில் மின் வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளன. இங்கு 1700 கே.வி உயரழுத்த மின்சாரம் இந்த மின் மாற்றிகள் வழியாக செல்கி றது.

    இந்த பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கழிவு நீரை அகற்றி சீரமைக்கப்படவில்லை.

    இந்தப் பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்வதால் பீஸ் போனால் கூட மின்வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த டிரான்ஸ்பார்மர் பாதாள சாக்கடைக்குள் உள்ளதால் மின் விபத்து அச்சத்தில் பழுது ஏற்பட்டால் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    மேலும் சுற்றிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற் பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி அந்தப்பகுதியில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    மின் வாரிய உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

    பாதாள சாக்கடை கழிவு நீர் மேன் ஹோல் வழியாக வெளியேறி மின் மாற்றிப் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனால் டிரான்ஸ் பார்மரில் பழுது ஏற்பட் டால் கூட சீரமைக்க முடிவ தில்லை. மின் வாரிய ஊழியர்கள் அச்சப்படு கின்றனர். கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    ×