search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்நிலைப்பகுதி"

    • இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.
    • மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    கடலூர்:

    புரட்டாசி,தை,ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் இன்று புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை கடற்கரையில் கடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வருகை தந்து புரோகிதர்கள் முன்னிலையில் படையல் இட்டு தங்களது முன்னோர்களை நினைத்து புனித நீராடி தர்ப்பணம் செலுத்தி வழிபட்டனர். இதேபோல் கடலூர் தென்பெண்ணை ஆறு கெடிலம் ஆறு உள்ளிட்ட பல நீர்நிலைப்பகுதியில் பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    ×