search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி பேச்சு"

    • ஏழை எளியோக்கும் நீதி வழங்குவதே சட்டப்பணிகள் சேவை மையத்தின் முதல் குறிக்கோள் என்று சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
    • வாச்சாத்தில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. முகாமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் முதல் குறிக்கோளே வசதியற்ற பிரிவினருக்கு நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்குவதே ஆகும். அதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையமானது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டு தலை நடைமுறைப்படுத்துவதே ஆகும்.

    தேவைப்படும் சட்ட உதவிகள் அனைத்தும் தகுதி உள்ள நபர்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கப்படும். சட்ட உதவி கோருபவர்கள் எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருப்பின் அதற்கான உதவிகளை சட்ட ஆணையமே செய்து வருகிறது. இங்குள்ளவர்களுக்கு சட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால் இங்குள்ள சட்டப்ப ணிகள் ஆணையத்தையோ அல்லது குழுவையே தொடர்பு கொண்டால் அது நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, உங்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவ சமாக வழங்க ஆவன செய்யப்படும்.

    இலவச சட்ட உதவிகள் வழங்குவது மட்டும் எங்கள் பணி அல்ல. அரசாங்கத்தின் மற்ற உதவிகள் உங்களுக்கு தங்கு தடை இன்றி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளை செய்வதும் எங்கள் பணியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் இலவச சட்ட உதவிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் முகமது, தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிபதி ராஜா, மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பல்லா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • சமுதாய நலனுக்காகவே தண்டனை விதிக்கப்படுகிறது என்று கரூர் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்தார்.
    • பழிவாங்கும் எண்ணம் கூடாது

    கரூர்:

    பொதுநூலகத்துறை 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள் பரிசு வழங்கும் நிகழ்வு கருர் கிளை சிறையில் நடைபெற்றது.

    வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற் றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தலைமை குற்றவி யல் நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்து, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நூல்கள் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்,

    சிறைச்சாலை என்பது தண்டனைக்கான இடம் அல்ல. சீர்திருத்தம் செய்வதற்காத்தான். நீங்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சாட்டப் பட்டவர்கள். குற்றம் என்பது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல குடும்பத்தாரையும் பாதிக்கும். ஒரு நீதிபதி அளிக்கும் தண்டனை என்பது விரும்பி எடுக்கும் முடிவு அல்ல. சமுதாயத்தின் நலனுக்கானது. குற்றவாளிகள் சற்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு போதும் பழிவாங்கும் எண்ணம் இருக்க கூடாது. உங்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள். இன்று நீங்கள் வரைந்த ஓவியத்தில் இருந்து தொடங்கும் மாற்றம், உங்களுக்கு தெளிவை தரட்டும்.

    கல்லும் சிலையும் கற்கள் தான். ஒரு சில அடிகள் வாங்கும் கல் படியாகிறது. உளி தாங்கும் கற்கள் சிலையாகிறது. இன்று முதல் புண்பட்ட உங்கள் மனம் பண்படட்டும். அன்பை விதைப்போம், நற் பண்பை வளர்ப் போம் என்றார்.

    இந்த நிகழ்வில், கரூர் கிளைச்சிறை கண்கா ணிப்பாளர் அருணாச்சலம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்

    • பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
    • காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    ×