search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judge speech"

    • சமுதாய நலனுக்காகவே தண்டனை விதிக்கப்படுகிறது என்று கரூர் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்தார்.
    • பழிவாங்கும் எண்ணம் கூடாது

    கரூர்:

    பொதுநூலகத்துறை 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள் பரிசு வழங்கும் நிகழ்வு கருர் கிளை சிறையில் நடைபெற்றது.

    வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற் றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தலைமை குற்றவி யல் நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்து, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நூல்கள் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்,

    சிறைச்சாலை என்பது தண்டனைக்கான இடம் அல்ல. சீர்திருத்தம் செய்வதற்காத்தான். நீங்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சாட்டப் பட்டவர்கள். குற்றம் என்பது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல குடும்பத்தாரையும் பாதிக்கும். ஒரு நீதிபதி அளிக்கும் தண்டனை என்பது விரும்பி எடுக்கும் முடிவு அல்ல. சமுதாயத்தின் நலனுக்கானது. குற்றவாளிகள் சற்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு போதும் பழிவாங்கும் எண்ணம் இருக்க கூடாது. உங்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள். இன்று நீங்கள் வரைந்த ஓவியத்தில் இருந்து தொடங்கும் மாற்றம், உங்களுக்கு தெளிவை தரட்டும்.

    கல்லும் சிலையும் கற்கள் தான். ஒரு சில அடிகள் வாங்கும் கல் படியாகிறது. உளி தாங்கும் கற்கள் சிலையாகிறது. இன்று முதல் புண்பட்ட உங்கள் மனம் பண்படட்டும். அன்பை விதைப்போம், நற் பண்பை வளர்ப் போம் என்றார்.

    இந்த நிகழ்வில், கரூர் கிளைச்சிறை கண்கா ணிப்பாளர் அருணாச்சலம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்

    • பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
    • காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    • பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    காவலன் செயலி

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை தமிழ்வாணி, செங்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்சுந்தர், வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தமிழாசிரியா் பிச்சையா வரவேற்று பேசினார்.

    பின்னா் வழக்கறிஞா்கள் முத்துக்குமாரசாமி, ஆதிபாலசுப்பிரமணியன், சுடர்முத்தையா ஆகியோர் மகளிருக்கான சட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினா். அதனைத் தொடா்ந்து பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    பின்னா் முகாமில் நீதிபதி எம்.சுனில்ராஜா பேசியதாவது:-

    அடிப்படை வசதி

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்தம் 6 அடிப்படை உரிமைகள் உள்ளது. அதேபோல் அடிப்படை கடமைகள் எத்தனை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கெல்லாம் அடிப்படை உரிமைகள் உள்ளதோ அங்கெல்லாம் அடிப்படை கடமையும் உள்ளது.

    எப்படி என்றால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று தலை, மற்றொன்று பூ. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்தால் அந்த நாணயம் செல்லாத நாணயமாக ஆகிவிடுகிறது. அதேபோல்தான் உரிமை, கடமை என இரண்டு பக்கங்கள் கொண்டதுதான் நமது வாழ்க்கை உரிமை மறுக்கும்போதும் கடமையை செய்ய தவறும்போது பிரச்சனை உண்டாகிறது.

    குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி அடிப்படை உரிமை. கற்று கொடுப்பது ஆசிரியா்களின் கடமை. இந்த இரண்டில் ஒன்று தடைபடும்போது பிரச்சனைக்கான வழி பிறக்கிறது. எனவே மாணவிகள் தங்களது தற்போதைய முதற்கடமை கல்வி கற்பது மட்டுமே அதை திறம்பட செய்தல் வேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியா்களின் நல் அறிவுரைகளை கேட்டு வாழ்வில் உயர்ந்த இடத்திற்கும் உயர் பதவிகளுக்கும் வர தங்களை தயார் செய்து கொள்ளவும்.

    மேலும் இந்த முகாமின் மூலம் தாங்கள் அறிந்த சட்ட விழிப்புணா்வுகளை மற்றவா்களிடம் எடுத்துக்கூறி அவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

    எங்கள் நீதிமன்ற அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரில் சென்று சட்டம் சார்ந்த சட்டம் சாராத அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு தேடிக்கொள்ளலாம். மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு இழப்பீடு, விபத்து இழப்பீடு, குடும்ப அட்டை, மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க உதவி, நீண்ட காலமாக தீர்வு இல்லாமல் உள்ள வழக்குகள் விரைவில் தீர்த்து வைத்து தரப்படும் இன்னும் பல சேவைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடிக்கொள்ளவும்.

    மேலும் 1098 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் குழந்தை திருமணம் குறித்த தகவல்களை தெரிவித்தால் அந்த திருமணம் தடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். எனவே மாணவிகள் இந்த தகவல்களை மற்றவா்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் சங்க இணைச் செயலாளா் கார்த்திகைராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் சக்திவேல், ஆசாத், அருண், வெங்கடேஷ், மாலதி, சிதம்பரம், நித்தியானந்தன், வீரபாண்டியன், சிவசுந்தரவேலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் சட்டகல்வி மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பிரேமா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

    குழந்தை திருமணம் நடைபெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நீதிபதி கலைமதி பேசினார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட நீதிபதி கலைமதி மற்றும் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக கண்காணித்திட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பேசுகையில் கூறியதாவது:-

    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் குழந்தைகளிடம் அலுவலர்கள் தனியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். அதற்கு உண்டான பொறுப்பு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் , போதை பொருட்கள் பயன்படுத்தும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாத வகையில் சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியோர் இணைந்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி வினோதா கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தனியார் அறக்கட்டளை மூலம் சர்வதேச மனித வணிகம் மற்றும் மனித கடத்தல் ஒழிப்பு தின விழா குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான வினோதா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் நீதிபதி வினோதா மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், 2016-ம் ஆண்டில் கடத்தல் சம்பந்தமாக இந்தியா முழுவதும் 8,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியல் சுரண்டலுக்காகவும், உழைப்பு சுரண்டலுக்காகவும் உடலுறுப்புகள் எடுப்பதற்காகவும் மனிதன் கடத்தப்பட்டு வணிகப் பொருளாக மாற்றப்படுகிறார்கள். நாம் தான் இதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு சந்தேகப்படும் பட்சத்தில் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது சட்ட பணிகள் ஆணை குழுவிலோ புகார் மனு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகப்பட்சமாக 10 ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் மற்றவர்களை துன்புறுத்தாமலும், கேலி வதை செய்யாமலும் இருக்கவேண்டும். சட்டத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். அடிப்படை சட்டங்கள் அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் என்றார்.

    முன்னதாக நீதிபதி வினோதா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களையும், சட்டம் சம்பந்தமாக கையேடுகளையும் வழங்கினார். மேலும் செஞ்சேரி, பாளையம் ஆகிய கிராமங்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் சமூக நலத்துறை பேராசிரியர் மகேஸ்வரி, தனியார் அறக்கட்டளை கள அலுவலர் கீதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
    ×