search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி அருணா ஜெகதீசன்"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தகவல்களோ, காவல்துறை அத்துமீறல் குறித்த தகவல்களோ இருந்தால் ஜூன் 22-ம் தேதிக்குள் தரலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22-ந்தேதி நடை பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க உள்ளது.

    காவல் துறை தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

    இதுபற்றி நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உள்ளவர்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் விசாரணை ஆணையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்பட உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி செல்கிறேன்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட உள்ளேன்.

    மறுநாள் (5-ந்தேதி) துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

    விசாரணை ஆணையம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் செயல்படும். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×