search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலை நிறுத்தப்பட்டது"

    • நவீன எந்திரங்கள் மூலம் கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது பொருத்தும் பணி நடைபெற்றது.
    • இப்பணியினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப் பட்டியில் நூலகத்துடன் கூடிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை வரும் 25-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இரவு, பகலாக கலைஞர் நூலகம் மற்றும் சிலையின் பீடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

    இப்பணியினை அமைச்சர் சு.முத்துசாமி , ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோர் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு நவீன எந்திரங்கள் மூலம் கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது பொருத்தும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வை யிட்டனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இருந்தனர்.

    ×