search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் மீட்பு"

      செங்கல்பட்டு:

      செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

      இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து தள்ளி விவசாய நிலங்களை மீட்டனர்.

      60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

      இந்த பகுதியில் காவல்துறை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      • கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
      • கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

      திருப்போரூர்:

      செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு மீன் உலர வைப்பதற்கும், பெரிய வலை இழுப்பதற்கும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், தமிழக அரசு கடலோரத்தில் 5.48 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை ஒரு சில நபர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து அதற்கு பார்க்கிங் வசதி செய்தும் புல் செடி மரம் வளர்த்து அதனை சுற்றி 10 அடி உயரத்தில் கருங்கல்லால் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

      இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

      அதனை தொடர்ந்து கானத்தூர் ரெட்டிக்குப்பம் மீனவர் பகுதி மக்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

      ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் வருவாய்த்துறையினருக்கு ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

      உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் கானத்தூர் போலீசார் உதவியுடன் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பிய இடங்களை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தனர் இதன் சந்தை மதிப்பு ரூ.67 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 292 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

      • பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
      • ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும்.

      திருப்போரூர்:

      செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

      கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என ஐகோர்ட்டு உத்தரவு அளித்தது.

      இதைதொடர்ந்து, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2.12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி மீட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

      பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 2.12 ஏக்கர் நிலத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

      • போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
      • பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம்.

      சென்னை:

      மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.

      இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

      திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

      மேலும், பிரிவு 77-எ ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை ரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

      மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

      இதன் மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

      இதில் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி நிலமும் மீட்கப்பட்டது. இதற்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

      பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை நல்ல நாட்கள் எனக் கருதப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்ய விரும்புகின்றனர். இந்நாட்களில் அதிக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களில் டோக்கன் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அன்றே ஆவணம் பதியப்பட வேண்டும் என விரும்புபவர்கள் https://tnreginet.gov.in என்ற இணைய வழியாக ரூ.5 ஆயிரம் செலுத்தி உடனடி (தட்கல்) டோக்கன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர ஆவணப் பதிவு தேவைப்படும் நிகழ்வுகளிலும் இவ்வசதியைப் பயன்படுத்தி உடன் டோக்கன் பெறலாம்.

      இந்த உடனடி (தட்கல்) டோக்கன் வசதி, அதிக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

      திருமண பதிவிற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கொடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் திருமண சான்று வழங்கப்படுகிறது. ஆனால் பின்னாளில் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடு செல்ல விசா கோரி விண்ணப்பிக்கும்போது சில சமயங்களில் பெயர்களில் ஏற்படும் பிழைகள், முகவரி போன்றவற்றில் திருத்தம் தேவைப்படுகிறது.

      அவ்வாறு திருத்தம் செய்திட https://tnreginet.gov.in என்ற இணையவழி விண்ணப்பித்து திருத்தப்பட்ட திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

      இதனால் பொதுமக்கள் பதிவு அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் விரும்பிய நேரத்தில் எவ்விடத்திலும் இணையவழி விண்ணப்பம் செய்யலாம். உரிய திருத்தம் செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ் பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் பயனாளிக்கு இணையவழி அனுப்பப்படும். பதிவு அலுவலரின் மின்கையொப்பத்துடன் கூடிய அச்சான்றிதழை விண்ணப்பதாரர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      • மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
      • இரண்டு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

      மாமல்லபுரம்:

      மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. நெம்மேலி, பட்டிபுலம், சூலேரிக்காடு, சாலவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இடங்களை தனியார் ஓட்டல்கள், கோவில், வீடு, வீட்டுமனை என பலர் ஆக்ரமித்து பயன்படுத்தி, வந்தனர்.

      இந்த நிலையில் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்ரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

      இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆக்ரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.இரண்டு நாட்களாக நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

      • ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது
      • காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

      காஞ்சிபுரம்:

      காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ.28 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சட்ட அனுமதியின்றி ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

      இது தொடர்பாக காஞ்சிபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

      இவ்வழக்கினை விசாரித்த இணை ஆணையர் உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத்தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோவில் வசம் ஒப்படைக்குமாறு கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

      இணை ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் சொத்தை ஒப்படைத்துள்ளனர்.

      • கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
      • வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர்.

      பொன்னேரி:

      பொன்னேரியை அடுத்த சயனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28 ஏக்கர் 78 சென்ட் நிலம் உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

      இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த 14 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை போலீசார் பாதுகாப்புடன் மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் பெயர்ப்பலகை, எல்லைக்கற்களை நட்டு வைத்தனர்.

      இதைத்தொடர்ந்து கோவில் இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகளை மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு அங்கு குடியிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

      இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதால் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரி செலுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.

      இதற்கிடையே பெண் ஒருவர் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து சமாதானப்படுத்தினர்.

      தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அங்கு வந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனும், பொதுமக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்ய அவகாசம் கொடுத்து அதிகாரிகள் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

      • ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
      • மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது.

      உடுமலை:

      திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூர் பகுதியில் ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

      இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்த சமயஅறநிலையத்துறை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து இணை ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நிலம் கோவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

      அதன்படி ரூ. 5 கோடி மதிப்பிலான 32.87 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது. அதில் கோவில் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய கூடாதெனவும் மீறுபவர்கள் மீது அறநிலையத்துறையின் சட்டதிட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

      • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அதிகாரிகள் கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர்.
      • பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

      காஞ்சிபுரம்:

      ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

      அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

      காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முசரவாக்கம், பகுதியில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரியில் நீர்பிடிப்பு பகுதியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி பயிரிடப்பட்டு வந்தது.

      ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முசரவாக்கம் ஏரியில் ரூ.15 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் ஏரி நீர் பிடிப்பு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு கையகப்படுத்தி அறிவிப்பு பலகையை வைத்தனர்.

      ×