search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில அபகரிப்பு"

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • தமிழ்நாட்டில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
    • இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    தமிழ்நாட்டில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக சிறப்பு போலீஸ் பிரிவை ஏற்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    தனி சட்டமோ, தனி நீதிமன்றமோ, தனி விசாரணை அமைப்போ ஏற்படுத்துவதற்கு முறையான சட்டமன்ற மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்ற வேண்டும். ஒரு அரசாணை மூலம் அதை செயல்படுத்த முடியாது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் சென்னை ஐகோர்ட்டை வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த ஐகோர்ட்டு இந்த அரசாணை தவறு. இதை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நில மோசடி குறித்து விசாரிக்க இந்திய தண்டனை சட்டம், சொத்து மாற்று சட்டம் என ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. தனியாக அரசாணை மூலம் தனிப்பிரிவு அமைத்து தனி நீதிமன்றம் அமைக்க அவசியமில்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், தனது நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்டநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அவருக்காக சுப்ரீம் கோர்ட்டு வக்கீலான ராஜபாளையத்தை சேர்ந்த ராம்சங்கர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வாதிட்டார். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனை சிலர் தவறாக பயன்படுத்து கின்றனர்.

    கணவர் சொத்தை மனைவி விற்றுவிட்டார் என்பதற்காக நில அபகரிப்பு சட்டம் மூலம் வழக்கு தாக்கல் செய்து அதை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் முறை யிட்டார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

    இந்த 2 வழக்குகளையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு தீர்ப்பை வழங்கியது.

    அதில் 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நில பிரச்சினைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது. மேலும் தமிழகத்தில் நிலப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவ காரங்களில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    ×