search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு தினம் அனுசரிப்பு"

    • நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து கட்சிக்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற கட்சியின் நிர்வா கிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மகேஷ், சின்னபெருமாள், மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், அவை தலைவர்கள் வீரமணி, மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழ், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர் துரை, மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மணி, சைக்கிள் ஷாப் மணி, அதியமான் கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தமிழ்நிதி, அன்பரசு, பூக்கடை செந்தில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், வேடியப்பன், ராமன், முனிரத்தினம், மஞ்சுநாத், கிளை செயலாளர் கஜேந்திரன், குறிஞ்சி மாதையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கெளதமன் தலைமை வகித்தார்
    • அன்பழகனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க முன்ணனி தலைவரான மறைந்த போராசிரியர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிக்கபட்டது,

    இந்நிகழ்ச்சியில் பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கெளதமன் தலைமை வகித்தார். பொ.மல்லாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தி புஷ்பராஜ் முன்னிலையில், ஒன்றிய கழக செயலாளர் சரவணன் அன்பழகனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாராயணசாமி நாயுடு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், சுரேஷ், விஸ்வநாதன், செல்வகுமார், சரவணன், அன்பு ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க தலைவர் ஜெயபால் தலைமை வகித்து நாராயணசாமி நாயுடு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், சுரேஷ், விஸ்வநாதன், செல்வகுமார், சரவணன், அன்பு ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    ஒசூர் அருகே பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.

    இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலா ளரும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேலும் இதில், ஒசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிக்குமார், ஒசூர் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய இணை செயலாளருமான சசி வெங்கடசாமி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை உள்பட பலர் கலந்துக்கொண்டனர்

    ×