search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
    X

    நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

    • நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து கட்சிக்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்ற கட்சியின் நிர்வா கிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மகேஷ், சின்னபெருமாள், மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், அவை தலைவர்கள் வீரமணி, மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தமிழ், ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர் துரை, மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மணி, சைக்கிள் ஷாப் மணி, அதியமான் கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தமிழ்நிதி, அன்பரசு, பூக்கடை செந்தில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், வேடியப்பன், ராமன், முனிரத்தினம், மஞ்சுநாத், கிளை செயலாளர் கஜேந்திரன், குறிஞ்சி மாதையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×