search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு மாடு"

    • பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும் மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
    • ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர்திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் மாட்டுச்சந்தையும் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் திருவிழா மற்றும் மாட்டு சந்தை நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தேரோட்ட திருவிழாவும் அதனை ஒட்டி நாட்டு மாட்டுச்சந்தையும் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டுகளில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாடுகளின் வரத்தும் அதே அளவு விற்பனையும் நடைபெற்ற வந்த நிலையில் இந்த ஆண்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மாடுகளும் விற்பனைக்கு குறைந்த அளவில் வந்துள்ள நிலையிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட காளை வகைகளும் மாடுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்த நிலையில் நல்ல விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் விற்பனை மந்தமாகவும் கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த மாடு வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.

    நாட்டு மாடுகளை பொறுத்த வரை அதிக அளவில் விவசாய நிலங்களில் ஏர் உழுவதற்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்ற நிலையில் தற்பொழுது அதிலிருந்து மாற்றம் ஏற்பட்டு டிராக்டர் போன்ற சாதனைகளை பயன்படுத்தியதால் அதிக அளவில் நாட்டு மாடுகள் வளர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.

    தற்போது ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்று அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் தற்போது அதியமான் கோட்டையில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனை மற்றும் காளைகளின் விற்பனை குறைந்து காணப்பட்டுள்ளது.

    • காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
    • இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் 84 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 67 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது.

    இன்று நடைபெற்ற சந்தையில் 54 கால்நடைகள் ரூ.17 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர். தற்போது நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்தையில் மாடுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவது மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    ×