search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் ரெயில் பெட்டி"

    • அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார்.
    • பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு காலை, மதியம், மாலை நேரங்களில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், கேரளாவில் பணிபுரியும் ஊழியர்களும், பொதுமக்கள் ஏராளமா னோர் பயணம் செய்து வருகிறார்கள். நேற்று மாலையில் பாசஞ்சர் ரெயில் திருவனந்தபுரத் திற்கு செல்வதற்காக பிளாட்பாரம் 1-ஏ-யில் தயாராக நின்றது.

    மகளிர் என ஒதுக்கப் பட்ட பெட்டியில் பெண் வங்கி மேலாளர் ஒருவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அமர்ந்தி ருந்தார். அப்போது ரெயில் பெட்டிக்குள் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அந்த பெண் மேலாளரிடம் சில்மிஷத்தில் ஈடு பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மேலாளர் கூச்ச லிட்டார்.

    அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்த பொது மக்கள் திரண்டனர்.அதற்குள் அந்த வாலிபர் ரெயில் பெட்டியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×