search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் ரெயில் நிலையம்"

    • இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமைக்கப்பட உள்ளது.
    • ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமை க்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த மேம்பாலம் அகற்றப்படுகிறது. இந்தப் பாலம் ரெயில் நிலையத்தில் முன்பிருந்த ரோடு ரெயில்வே தண்டவாளம் அமைந்த காரணத்திற்காக வடிவீஸ்வரம் ஊர்மக்கள் ஊட்டுவாழ்மடம் ரேசன் கடைக்கு செல்ல வசதியாக அமைக்கப்பட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறைந்ததால் தற்போது நடைமேடைகள் 1,2 மற்றும் 3-க்குச் செல்ல லிப்டுக்குச் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சூழலில் மேம்பா லத்தின் தூண், பிட்லைன் விரிவாக்கம் செய்ய உள்ள பகுதியில் இடையூறாக இருந்து வந்தது. ஆகையால் இந்த மேம்பாலத்தின் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நடைமேடைகள் (4 மற்றும் 5) அமைத்த பிறகு இந்த நடை மேம்பாலத்தை மீண்டும் அமைத்து ரெயில் நிலையம் பின்புறம் வழியாக 2-வது நுழைவு வாயில் அமைக்க வேண்டும். 4 வழி சாலை இணைக்கும் இடத்தில் நடை மேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணி கள் சங்க தலைவர் ஸ்ரீராம் வலியுறுத்தி உள்ளார்.

    ×