search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைமேம்பாலம்"

    • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங் குன்றத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நகரின் இரு பகுதிகளிலும் ரெயில்வே தண்டவாளங்கள் அமைந்திருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதன் அடிப்படையில் இரு பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே அமைக்க ப்பட்ட மேம்பாலத்தின் அருகே பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை சேர்த்து அமைக்கப்பட்டது.

    அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மேம்பாலத்திலும், நடந்து செல்பவர்கள் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்தும் சென்று வந்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளிகள் பெரும்பா லானவை திருநகரில் இருப்பதால் திருப்பரங் குன்றம், நிலையூர், கைத்தறி நகர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் தண்டவா ளத்தை கடந்தே சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே தண்டவாளத்தில் இரு பகுதிகளிலும் ரெயில்வே நிர்வாகம் தடுப்பு வேலி அமைத்தது. இதனால் நடந்து செல்ப வர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    இது முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமைக்கப்பட உள்ளது.
    • ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இட நெருக்கடி காரணமாக 2 புதிய நடை மேடைகள் அமை க்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்து வந்த மேம்பாலம் அகற்றப்படுகிறது. இந்தப் பாலம் ரெயில் நிலையத்தில் முன்பிருந்த ரோடு ரெயில்வே தண்டவாளம் அமைந்த காரணத்திற்காக வடிவீஸ்வரம் ஊர்மக்கள் ஊட்டுவாழ்மடம் ரேசன் கடைக்கு செல்ல வசதியாக அமைக்கப்பட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறைந்ததால் தற்போது நடைமேடைகள் 1,2 மற்றும் 3-க்குச் செல்ல லிப்டுக்குச் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த சூழலில் மேம்பா லத்தின் தூண், பிட்லைன் விரிவாக்கம் செய்ய உள்ள பகுதியில் இடையூறாக இருந்து வந்தது. ஆகையால் இந்த மேம்பாலத்தின் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நடைமேடைகள் (4 மற்றும் 5) அமைத்த பிறகு இந்த நடை மேம்பாலத்தை மீண்டும் அமைத்து ரெயில் நிலையம் பின்புறம் வழியாக 2-வது நுழைவு வாயில் அமைக்க வேண்டும். 4 வழி சாலை இணைக்கும் இடத்தில் நடை மேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணி கள் சங்க தலைவர் ஸ்ரீராம் வலியுறுத்தி உள்ளார்.

    ×