search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்வழி"

    • ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது.
    • பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    வாழும் தெய்வங்கள்!

    சிறு வயதில் நாம் வளர்க்கப்படும் விதம், வாழும் சூழ்நிலை கொண்டே ஒருவரது மன இயல்பு அமையும்.

    இதனை நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

    எனவே தான் விடியற்காலையில் எழ வேண்டும். குளித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஸ்லோகம், பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும்.

    அதனை காலை, மாலை சொல்ல வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். தீயதினை ஒதுக்க வேண்டும் என வாழ்க்கை முறைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் கெடு பிடியாய் வைத்திருந்தனர்.

    இன்றைக்கு நாம் பார்க்கிற பெரியோர்களிடம் நிதானம், பண்பு இருக்கின்றது. எதிலும் ஒரு நியாயம் இருக்கின்றது.

    ஆனால் இன்றைய இளைய சமுதாயத்திடம் இந்த குணங்களைப் பார்ப்பது அரிதாகி விடுமோ என்ற அச்சம் இருக்கின்றது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, ஒருவர் இவர்களிடம் கட்டுப்பட்டால் தான் வாழ்க்கை சிதறி அழியாமல் ஒருவழிப்படும், ஒழுக்கம் வரும்.

    தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக மாறும். ஒழுக்கமான சமுதாயம் என்பது பூமியில் சொர்க்கம். இன்று சமுதாயம் வன்முறையாய் மாறி இருப்பதன் காரணமே தனி மனித ஒழுக்கமின்மைதான்.

    நாட்டில் வன்முறைகளும், பொய்களும், தவறுகளும் கூடிக் கொண்டே தான் இருக்கின்றது. ஆயினும் உலகம் நன்கு இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    பல நல்ல செயல்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாத நல்ல சக்திகளும், கண்ணுக்குத் தெரியும் நல்ல சக்திகளும் ஒவ்வொரு தனி மனிதனையும் அதன் மூலம் சமுதாயத்தினையும் நல்வழி படுத்திக் கொண்டிருக்கின்றன.

    இச்சக்திகளை நாம் சித்தர்கள் எனலாம், மகான்கள் எனலாம், அவதார பிறப்புகள் எனலாம், யோகிகள் எனலாம், வாழும் தெய்வங்கள் எனலாம்.

    எந்த ஆரவாரமும் இன்றி இவர்கள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பதிலுக்கு இவர்களுக்கு நம்மிடமிருந்து எதுவுமே தேவையில்லை.

    அத்தகு கருணையும், அன்பும் மனித சமுதாயத்தின் மீது இவர்களுக்கு உண்டு. இதுவே இன்றும் நாம் இந்த அளவாவது வாழ்ந்து கொண்டிருப்பதன் ரகசியம்.

    'தெய்வங்கள் மனிதர்களாகத் தோன்றி அவ்வப்போது நிலை தடுமாறும் மக்களை நல்வழிப்படுத்துவார்கள். இதற்கு உதாரணம் தான் ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும்'

    சாமி, மகான்கள், சித்தர்கள் எல்லோரும் நாம் முழு முனைப்பாய் முறையான வேண்டுதல்களை வைத்தால் சரியானவற்றைச் செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்வழியில் நற்சிந்தனையில் செயல்படுவோம்.

    ×