search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலவழித்துறை ஊழியர்கள்"

    • ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலக வாயிலில் நலவழித்துறை யில் பணிபுரியும் ஆஷா ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போரா ட்டத்திற்கு ஆஷா பணி யாளர் சங்க தலைவர் ரோசி தலைமை தாங்கி னார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொருளாளர் மயில்வா கனன், துணை தலைவர் சுப்பராஜ், இணை பொதுச் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில், காரைக்கால் நலவழித்து றையில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும். முறையான விடுமுறை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடு பட்ட ஊழியர்களை, துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் சந்தித்து, ஊழியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராள மான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×