search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waiting strike"

    • ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்
    • இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யகோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசாங்கம் கூறிய ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ரூ.721 வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டனர்.

    ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதியத்தை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலக வாயிலில் நலவழித்துறை யில் பணிபுரியும் ஆஷா ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போரா ட்டத்திற்கு ஆஷா பணி யாளர் சங்க தலைவர் ரோசி தலைமை தாங்கி னார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொருளாளர் மயில்வா கனன், துணை தலைவர் சுப்பராஜ், இணை பொதுச் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில், காரைக்கால் நலவழித்து றையில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும். முறையான விடுமுறை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடு பட்ட ஊழியர்களை, துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் சந்தித்து, ஊழியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராள மான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×