search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்தா தீபம்"

    • பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது.
    • ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம்.

    இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது.

    பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள்.

    விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.

    ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம்.

    கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது.

    அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும்

    அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா,

    தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.

    அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது.

    உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.

    சீரடி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகிறது. அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன.

    அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது.

    ஆனந்தம் பொங்குகிறது.

    இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் சீரடிபாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    ×