search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுவழியில் நிறுத்தம்"

    சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வசாய்:

    மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பால்கர் மாவட்டம் வசாய்-நாலச்சோப்ரா ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது திடீரென நடுவழியில் நின்றது.

    பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழித்து விட்டு வந்தபின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டதையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பழமை வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு மலைரெயில் 150 பயணிகளுடன் புறப்பட்டது.

    இதனிடையே கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 இடங்களில் தண்டவாளத்தில் மண்சரிவும், அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு இடத்திலும் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மற்றும் பெரிய கற்கள் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட 3 இடங்களிலும் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.

    நடுவழியில் சுமார் 2.15 நிமிடம் மலை ரெயில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டுச்சென்றது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

    சோளிங்கர் அருகே ரெயில்வே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் கோவை-பெங்களூர் செல்லும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. #TrainStopped
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த தலங்கை ரெயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் தலங்கை ரெயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது.



    இதையடுத்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள்டக்கர் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே போல அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் அரக்கோணத்தில் நின்றது.

    மின்கம்பி அறுந்தது குறித்து தகவலறிந்த அரக்கோணம் காட்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காலை 7.45 முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடந்தது. நடுவழியில் நிறுத்தபட்ட ரெயில்களில் இருந்த பயணிகள் பாதிக்கபட்டனர்.

    அரக்கோணத்தில் இருந்து வேலூர், காட்பாடி, ஆம்பூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் நடுவழியில் தவித்தனர். #TrainStopped

    ×