search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்வரி"

    வாழப்பாடியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkdemonstration

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மேட்டூர் காவிரி நதிநீரையே நம்பியுள்ளனர். மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேட்டூர் காவிரி குடிநீருக்கு மாதந்திர குடிநீர் கட்டணமாக ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.152 ஆக குடிநிர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சொத்து வரி, தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை ரத்து செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாழப்பாடியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகிகள் சந்திரா ராயர், கலைசெல்வி மாதேஸ்வரன், அழகரசன், தும்பல்கணேஷ், உமாபதி, குறிச்சி பெரியசாமி, ஆட்டோ சுரேஷ், தனசேகரன், மணி மற்றும் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர்கள் முல்லை வாணன், வேல்முருகன் மற்றும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #dmkdemonstration

    வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் தொழில்வரி செலுத்தாத 25 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சிக்கு முறைப்படி வரி செலுத்தாத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

    வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், கண்ணதாசன்நகர் பகுதியில் உள்ள சில கடைகள், நிறுவனங்கள் முறைப்படி லைசென்சு எடுக்காமலும், தொழில் வரி, சொத்து வரி செலுத்தாமலும் நடத்தப்படுவது தெரிய வந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ஏற்கனவே நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி 4-வது மண்டலத்தை சேர்ந்த அதிகாரிகள் அனிதா, சுரேஷ், பாஸ்கர், திருநாவுக்கரசு உள்பட 10 பேர் முறைப்படி வரி செலுத்தாத கடைகளில் இன்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் அந்த கடைகளை மூடி சீல் வைப்பதற்கான நோட்டீசையும் வழங்கினார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகள், “மாநகராட்சிக்கு வந்து முறைப்படி வரி செலுத்தினால் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும்” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த பகுதியில் மொத்தம் 25 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×