search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளிசாவு"

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 35). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று கெடிலம் அருகே உள்ள கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அந்த பகுதியில் வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×