search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கம்"

    • கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்
    • தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

    நாகர்கோவில் :

    தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளை முழுமையாக இயக்க வேண்டும். கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் தலைமை வகித்தார். கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற் சங்க தலைவர் ஜாமின் ஜெயக்கு மார் வரவேற்றார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பச்சைமால், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தலைவர் சகாயராஜ், ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகள் முழுமையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    மேலும் கூட்டுறவு நூற்பாலைகளில் பல ஆண்டுகளாக பணிபுரி கின்ற தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு நூற்பாலை நிரந்தர தொழிலாளர்க ளுக்கு 25-04-2022 அன்று முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழி லாளர்களுக்கு ரூ.493-க்கு குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும், 2-ம், 3-ம் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை கால தாமதமின்றி பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், கே.சி.யு.மணி, ஆரல்வாய்மொழி பேரூர் அவைத் தலைவர் முத்துசாமி, மேலவை பிரதிநிதி சுந்தரம் பிள்ளை மற்றும் சங்கர்லிங்கம், துணைச்செல்வன், நாகரா ஜன், தொழிற்சங்க ஆலோ சகர் ஐயப்பன் மற்றும் அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.
    • அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 2016 முதல் 2019 வரை இடைக்கால ஊதியம் உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது.

    ஆனால் ஊதிய உயர்வு உட்பட இறுதிப் படுத்தி உடன்பாடு கோரிக்கை தேர்வு ஏற்படவில்லை. இது நிலுவையில் உள்ள போது 2019 டிசம்பர் முதல் 2022 நவம்பர் முடிய உள்ள காலத்திற்கு ஊதிய உயர்வுக்கு தீர்வு ஏற்படாமல் இருந்தது.

    இந்நிலையில் அமைச்சர் முன்னிலையில் நாகர்கோவி லில் வைத்து டிசம்பர் மாதம் 2020 ஒன்றில் பேசி முடிக்கப்பட்டது. பத்து நாட்களில் உடன்பாடு செய்யவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் 7 மாதங்களாகியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்பு பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில் கன்னியாகுமாரி மாவட்ட அனைத்து சங்க தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை கல்குளம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியலில் சிஐடியு மாவட்ட செயலாளர் வல்ச லகுமார், காங்கிரஸ் பால்ராஜ், அ.தி.மு.க. மகேந்திரன், ம.தி.மு.க. பால்ராஜ், பிஎம்எஸ் சார்பில் ரவிக்குமார், தொமுச சார்பில் நடராஜன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும் போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், ஜூன்.17-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு இன்று சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், சங்கத்தின் கவுரவத் தலைவர் சுந்தரபாண்டியன், தலைவர் தங்கராசு துணைத் தலைவர்கள் மாணிக்கம் , சண்முகம் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

    இதில் 14- வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய, புதிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்குவதுடன், ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தினசரி பயணப்படி பேட்டாவை அவ்வப்போதே வழங்கிட வேண்டும், வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆறு வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சங்க நிர்வாகிகள் ரங்கதுரை, சுகுமார், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், இளங்கோவன், ராஜமன்னன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×