search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    ஆரல்வாய்மொழி நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

    • கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்
    • தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது

    நாகர்கோவில் :

    தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளை முழுமையாக இயக்க வேண்டும். கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் தலைமை வகித்தார். கூட்டுறவு நூற்பாலை அண்ணா தொழிற் சங்க தலைவர் ஜாமின் ஜெயக்கு மார் வரவேற்றார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பச்சைமால், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தலைவர் சகாயராஜ், ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகள் முழுமையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    மேலும் கூட்டுறவு நூற்பாலைகளில் பல ஆண்டுகளாக பணிபுரி கின்ற தினக்கூலி தொழி லாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு கூட்டுறவு நுற்பாலைகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு நூற்பாலை நிரந்தர தொழிலாளர்க ளுக்கு 25-04-2022 அன்று முடிவு செய்யப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழி லாளர்களுக்கு ரூ.493-க்கு குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும், 2-ம், 3-ம் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை கால தாமதமின்றி பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், கே.சி.யு.மணி, ஆரல்வாய்மொழி பேரூர் அவைத் தலைவர் முத்துசாமி, மேலவை பிரதிநிதி சுந்தரம் பிள்ளை மற்றும் சங்கர்லிங்கம், துணைச்செல்வன், நாகரா ஜன், தொழிற்சங்க ஆலோ சகர் ஐயப்பன் மற்றும் அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×