search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொறறு நோய்"

    • சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது.
    • வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

    திருப்பூர்:

    வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலையில் உள்ள கால்வாய், வீடுகளின் இடையே உள்ள சாக்கடை அடைப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் பல இடங்களில் காணப்படுகிறது. மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்பணி குறித்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மழைக்காலங்களில், தொற்றுநோய் பரவாத வகையில் திடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, உள்ளாட்சி பகுதிகள் தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரப்பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வாயிலாக தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    ×