search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பொங்கல்"

    • கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும்.
    • கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.

    சூரியனை உதய காலத்தில் வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.

    உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்றி முழுவட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார், இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத் தரும்.

    கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடையும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

    ஆத்ம பலம், மன பலம், தேக பலம், எதிர்ப்பு சக்தி, நோய் நிவர்த்தி, எதையும் சந்திக்கும் மன தைரியம், ஆண்மை,

    வீரியம் அதிகரித்தல், அறிவாற்றல், நினைவாற்றல், சிந்தனாசக்தி அதிகரித்தல், நிர்வாகத்திறன் கூடுதல்,

    மனத்தூய்மை, முகத்தில் தேஜஸ் (ஒளி), வசீகரம், பேச்சாற்றல், எதிலும் வெற்றி பெறும் மன நிலை,

    நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை விலகுதல், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்,

    எண்ணங்களுக்கு வலிமை உண்டாகும், சத்ருக்களை ஜெயித்தல், எத்தகைய பிரச்சினைகளிலிருந்தும்

    வெற்றி பெறுதல், கண் பார்வை சக்தி அதிகரித்தல், கண் நோய் நீங்குதல் உள்ளிட்ட ஏராளமான பலன்களைப் பெறலாம்.

    ×