search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர்சோலை"

    • பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.
    • துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம்ஷா பேருராட்சியில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் உதவி செயற்பொறியாளர், பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது துணைத்தலைவர் யூனுஸ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர்பாடந்துறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு இம்மாத இறுதியில் புதியபஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி தலைவர் வள்ளி மற்றும் செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நபார்டு திட்ட பணியினை ஆய்வு செய்து உடன் முடித்திட இளநிலை பொறியாளர் வின்சென்ட் மற்றும் சேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.

    • மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்

    ஊட்டி:

    நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் பொது மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அறிவித்து உள்ளனர்.

    • அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லி, பேபி நகர், மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பேபி நகரில் இருந்து செம்பக்கொல்லி வழியாக போஸ்பாராவுக்கு மண் சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக்கொல்லி , தர்ப்பக்கொல்லி உள்ளிட்ட கிராம ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை. இதனால் மண் சாலையை ஆதிவாசி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயன்படுத்தி வருகின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும் . இதனால் மண் சாலை சேறும் , சகதியுமாக காணப்படுகிறது.

    எனவே அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தேவ ர்சோலை பேரூராட்சி தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஆதிவாசி மக்கள் மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க ப்படவில்லை . இதனால் சேற்றில் நடந்து சென்று வருகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×