search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர்சோலை பகுதியில்   மழையால் சேதம் அடைந்த சாலைகள்
    X

    தேவர்சோலை பகுதியில் மழையால் சேதம் அடைந்த சாலைகள்

    • அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லி, பேபி நகர், மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பேபி நகரில் இருந்து செம்பக்கொல்லி வழியாக போஸ்பாராவுக்கு மண் சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக்கொல்லி , தர்ப்பக்கொல்லி உள்ளிட்ட கிராம ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை. இதனால் மண் சாலையை ஆதிவாசி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயன்படுத்தி வருகின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும் . இதனால் மண் சாலை சேறும் , சகதியுமாக காணப்படுகிறது.

    எனவே அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தேவ ர்சோலை பேரூராட்சி தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஆதிவாசி மக்கள் மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க ப்படவில்லை . இதனால் சேற்றில் நடந்து சென்று வருகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×