search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையும்"

    • வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்
    • எல்லா தேர்தல் நேரங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்

    அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அக்கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இதய நோய், புற்றுநோய். காசநோய் மேலும் உடலில் பலதரப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பமுற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியைகளின் மருத்துவ அறிக்கையை பெற்று விலக்களிக்க வேண்டும்

    அதாவது எல்லா தேர்தல் நேரங்களிலும் இதுபோன்று பாதிப்புள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சிரமத்தை போக்க ஒவ்வொரு தாலுக்கா அலுவலகங்களிலும் இதற்கென தனி அலுவலர்களை நியமித்து அவர்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

    அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே ராஜஸ்தான் மாநிலத்தின் அரசு மருத்துவர் தீபக் கோக்ரா துங்கார்பூர் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அது மட்டுமின்றி அவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் அரசு பணி வழங்க வேண்டும் என உத்தரவு அளித்ததை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு இருந்ததை சுட்டிக்காட்டிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நல கூட்டமைப்பு, இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

    வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×