search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய வளர்ச்சி"

    • விருது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து.
    • அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.

    பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    அத்வானிக்கு தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும்.

    பல ஆண்டுகளாக, பாரதத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களை அவர் பல வழிகளில் வடிவமைத்துள்ளார். அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×