search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருமுனைக் கூட்டம்"

    • கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டும்.
    • நல்லூர் பகுதி கழக செயலாளர் தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி கழகம் சார்பில் 8 இடங்களில் தெருமுனை கூட்டம் நல்லூர் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இக்கூத்ததில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதில் நல்லூர் பகுதி 56-வது வார்டு இராஜீவ்காந்தி நகரில் 8-ந்தேதிகரூர் முரளி, 09-ந்தேதி 48-வது வார்டு நல்லூர் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் பவானி கண்ணன், 10ந்தேதி 47-வது வார்டு முதலிபாலையம் பிரிவு கந்திலி கரிகாலன், 11ந்தேதி அன்று 46-வது வார்டு காசிபாளையம் மற்றும் மணியகாரம்பாளையம் ஈரோடு இளையகோபால், 12ந்தேதி அன்று 49-வது வார்டு வள்ளியம்மை நகர், சுப்பிரமணிய நகர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    அதுசமயம் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டுமெனவும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×