search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி கொள்ளை"

    • அபுதாஹீர் என்பவரது எலக்ட்ரானிக் கடையின் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவில் மர்மநபர்கள் இருவர் திருடிக்கொண்டிருக்கும் காட்சி தெளிவாக தெரிந்தது.
    • கல்லூரி மாணவர்கள் போன்று தெரிந்த அந்த இரு நபர்களும் முக கவசம் அணிந்து காணப்படுகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது.

    இதில் காயிதே மில்லத் நகரில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகம் விற்கும் கடையில் ரூ.30 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது பற்றி கடையின் உரிமையாளர் மகபூப் சுபுஹானி ( வயது 60) ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதேபோல் பெரிய நெசவு தெருவில் உள்ள அபுதாஹிர் என்பவரது எலக்ட்ரானிக் கடையில் செல்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் திருட்டு போயிருந்தன.

    அருகிலுள்ள ஷேக் அப்துல் காதர் என்பவரின் டைல்ஸ் கடையில் பணம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது. இச்சம்பவங்கள் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் இதற்காக சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அபுதாஹீர் என்பவரது எலக்ட்ரானிக் கடையின் உள்ளே இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவில் மர்மநபர்கள் இருவர் திருடிக்கொண்டிருக்கும் காட்சி தெளிவாக தெரிந்தது.

    அதில் கல்லூரி மாணவர்கள் போன்று தெரிந்த அந்த இரு நபர்களும் முக கவசம் அணிந்து காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவன் தலையில் தொப்பி அணிந்துள்ளான். இருவருமே 'டிப் டாப் ' உடை அணிந்துள்ளனர்.

    கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற இந்த 2 நபர்களும் தாங்கள் வைத்திருந்த செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் நிதானமாக தங்களுக்கு வேண்டிய செல்போன்கள் மற்றும் உயர் ரக கைக்கடிகாரங்களை தேர்ந்தெடுத்து 'ஷாப்பிங்' செய்வதுபோல் உள்ளது. மேலும் இந்த நபர்கள் எந்த வழிகளில் எல்லாம் சென்றனர் என்பது பற்றிய சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மர்மநபர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். 

    • வீட்டில் கதவுகள் எதுவும் உடைக்கப்படாத நிலையில், மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது எப்படி? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் எனவும், வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவரது மனைவி லலிதா (வயது 65).

    இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 3 பேரும் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகள் செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார்.

    ஞானமணி இறந்துவிட்ட நிலையில், லலிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செய்துங்கநல்லூரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டில் கதவுகள் எதுவும் உடைக்கப்படாத நிலையில், மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது எப்படி? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் எனவும், வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மூலம் பழைய குற்றவாளிகள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • கடந்த 4-ந் தேதி புதியம்புத்தூர் வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கனிராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடி வந்தார்.
    • கொடை விழா முடிந்ததும் மாலதி அணிந்திருந்த 22 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைப்பதற்காக சென்றனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு 3-வது தெருவை சேர்ந்தவர் கனிராஜ் (வயது 37), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாலதி.

    இவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக பணியாற்றி வருகிறார். இதற்காக கனிராஜ் புதியம்புத்தூரில் இருந்து சென்னைக்கு குடி புகுந்தார்.

    தற்போது அவர் பெரம்பூர் மடுமா நகர் சின்னக்குழந்தை 2-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி புதியம்புத்தூர் வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கனிராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடி வந்தார்.

    கொடை விழா முடிந்ததும் மாலதி அணிந்திருந்த 22 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைப்பதற்காக சென்றனர்.

    ஆனால் வங்கி நேரம் முடிந்துவிட்டதால் லாக்கரில் வைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் புதியம்புத்தூரில் உள்ள வீட்டின் பீரோவில் நகைகளை வைத்துவிட்டு மீண்டும் சென்னை சென்றனர்.

    இந்நிலையில் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து உறவினர் ஒருவர் சென்னையில் உள்ள கனிராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் புதியம்புத்தூர் விரைந்து வந்தார். அவர் வீட்டில் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நூதனமுறையில் அவரது பணத்தை எடுத்து சென்றதை உணர்ந்த செந்தில்குமார் இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
    • அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    அவர்கள் திடீரென செந்தில்குமார் காரை வழிமறித்தனர். பின்னர் காரை விதிமுறைகளை மீறி ஓட்டி செல்வதாக செந்தில்குமாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வசூல்பணம் ரூ. 10 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நூதனமுறையில் அவரது பணத்தை எடுத்து சென்றதை உணர்ந்த செந்தில்குமார் இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ×