search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு போட்டு"

    • ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
    • மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தாலுகா, தவிட்டுப்பா–ளையத்தை சேர்ந்தவர் சர்புதீன்.இவரது மனைவி சகிலாபானு.

    இவர்களது மகள் ஜெஸ்சியா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் சில நாட்களிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்புதீன் தற்போது தனது குடும்பத்துடன் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் உள்ள காவேரி நகரில் வசித்து வருகிறார்.

    சர்புதீன் தனது மகள் ஜெஸ்சியாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதற்காக முதல் மனைவியை இழந்த ஒரு மணமகனை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அதற்கு ஜெஸ்சியா மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஜெஸ்சியா வீட்டின் படுக்கை அறையில் மேல் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் வேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் ஜெஸ்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் தங்கி படிக்க மனமில்லாமல் நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். இவரது மகள் கோபிகா (வயது 18), இவர் தலைவாசலில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கோபிகா நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு சாப்பாட்டிற்கு அவரை கூப்பிட சென்ற மாணவிகளான காவிய நிலா, ஜெயந்தி, கல்பனா ஆகிய 3 பேரும் இதனை பார்த்து மயக்கம் அடைந்தனர்.

    இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் தூக்கில் தொங்கிய கோபிகாவை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார். ஆனால் உறவினர்கள் இன்னும் 2 ஆண்டுகள் தானே படிப்பை முடி, பின்னர் வீட்டிற்கு வந்து விடலாம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரி க்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த 3 மாணவிகளும் சொந்த ஊருக்கு சென்றதால் தனியாக இருந்த கோபிகா அதே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மயக்கம் அடைந்த 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியில் பால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சீனிவாசன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள வேப்பமரத்தில் சீனிவாசன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×