search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துலாபாரம்"

    • குழந்தை பாக்கியத்திற்காக தவிப்பவர்கள் துலாபாரம் தருவதாக வேண்டிக்கொள்ள வேண்டும்.
    • பக்தர்கள் வாழைப்பழம், கல்கண்டு, பழ வகைகள் போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம்.

    குழந்தை பாக்கியம் அருளும் மிகச்சிறந்த பரிகார தலமாகவும் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் திகழ்கிறது.

    குழந்தை பாக்கியத்திற்காக தவிப்பவர்கள் துலாபாரம் தருவதாக வேண்டிக்கொள்ள வேண்டும்.

    குழந்தை பிறந்ததும் துலாபாரம் வேண்டுதலை நிறைவேற்றலாம்.

    பக்தர்கள் பொதுவாக வாழைப்பழம், கல்கண்டு, பழ வகைகள் போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம்.

    பக்தர்களுக்கு என்ன முடியுமோ அதை துலாபாரமாக நிறைவேற்றலாம் என்று அர்ச்சகர் தெரிவித்தார்.

    • ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர்.
    • சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.

    கிருஷ்ணர் முதலில் ருக்மணியை திருமணம் செய்தார். பின்னர் சத்திய பாமாவை மணந்து கொண்டார்.

    ஒரு முறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, சோதித்துப் பார்க்க ருக்மணியும், சத்திய பாமாவும் விரும்பினர். தங்களுடைய விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். முதலில் சத்திய பாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை.

    தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    அடுத்து ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம்! அது கிருஷ்ணனுடைய எடைக்குச் சமமாக நின்றது.

    இறைவனுக்கும் அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொள்வார்.

    • இக்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை சுயம்பு லிங்கம் நிறம் மாறும்.
    • இக்கோவிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கயிலாயத்திற்கு இணையான தலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம். அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம். திருநாவுக்கரசருக்கு திருவடி தீட்சை அருளிய தலம். குந்திதேவி சாப விமோசனம் பெற்ற தலம். அமர்நீதி நாயனாருக்கு முக்தி கொடுத்த தலம். திருமண பரிகார தலம். இக்கோவிலில் அஷ்டபுஜ காளியம்மன் சிறப்புடையது. இந்த திருநல்லூர் மாட கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமர்நீதி நாயனார் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

    ×